தண்ணீர் இல்லாத 50 அடி கிணற்றில் விழுந்த காளை

கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துணையினர் உயிருடன் மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே கூமாப்பட்டி நெடுங்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு நிறைவடைந்த பின்பு போட்டியில் பங்கேற்ற பொட்டல் பட்டியை சார்ந்த முத்துப்பாண்டி என்பவரது காளை இறவக்காடு பகுதியில் உள்ள தண்ணீர் இல்லாத 50 அடி கிணற்றில் தவறி விழுந்தது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பல மணி நேரம் போராடி காளையை கயிறுகட்டி இழுத்து உயிருடன் மீட்டனர்.

Exit mobile version