தர்மபுரி பாலக்கோட்டில் மஞ்சுவிரட்டு திருவிழா

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மஞ்சுவிரட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தைப்பொங்கலை யொட்டி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் மஞ்சுவிரட்டு எனப்படும் மாடுபிடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது .இதன் ஒரு பகுதியாக கரகூர் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர். விழாவில் வெற்றிப் பெற்றவர்களுக்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவைக் காண எராளமானோர் திரண்டிருந்தனர்.

Exit mobile version