மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் கட்டடம் மண்ணுக்குள் புதைந்தது!

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவற்றியூர் விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தண்டையார்பேட்டை, தொற்றுநோய் மருத்துவமனை அருகே சுரங்கம் அமைப்பதற்காக ராட்சத கிரேன் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை அருகே டீ கடை, பேக்கரி உணவக கட்டடங்கள் திடீரென மண்ணுக்குள் புதைந்தன. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கட்டட இடிபாடுகளில் யாராவது சிக்கி இருக்கிறார்களா என கண்காணிக்க தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், இடிபாடுகளில் சோதனை மேற்கொண்டதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.  

Exit mobile version