BSNL நிறுவனம் கடன் சுமையில் இருக்கிறது: தொழிலாளர் சங்க செயலாளர் மறுப்பு

பி.எஸ்.என்.எல் நிறுவனம் மிகுந்த கடன் சுமையில் இருப்பதாக வெளியாகும் செய்திகளில் துளி அளவும் உண்மையில்லை என்று தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சிவக்குமார் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பி.எஸ்.என்.எல். கடன் சுமை 18 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே என்று கூறினார். ஜியோ 2 லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாயுடன் இந்தியாவிலேயே கடன் சுமை அதிகமுள்ள நிறுவனமாக உள்ளது என்று கூறிய அவர், மத்திய அரசு 4ஜி அலைக்கற்றைகளை வழங்க உறுதி அளித்துள்ளதாக கூறினார்.

Exit mobile version