பிஎஸ்எல்வி சி- 45 நாளை விண்ணில் ஏவப்படுகிறது

பிஎஸ்எல்வி சி- 45 ராக்கெட், 29 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

இந்தியாவின் எமிசாட் செயற்கைக்கோள் மற்றும் 4 வெளிநாடுகளின் 28 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான 24 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. நாளை காலை 9:30 மணிக்கு ஆந்திர மாநிலம் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி 45 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்களும், லிது வேனியா நாட்டின் 2 செயற்கைக்கோள்களும், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சார்பில் தலா ஒரு செயற்கைக்கோளும் பிஎஸ்எல்வி – சி 45 ராக்கெட் மூலமாக செலுத்தப்பட உள்ளன.இதன் மூலம் மின்காந்த அலைக் கற்றைகளைக் கண்காணிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதன்முறையாக தற்போது ராக்கெட் ஏவுவதை பொதுமக்கள் பார்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளை இஸ்ரோ செய்துள்ளது.

Exit mobile version