விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி

இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்கக்கோரி மல்லையா விடுத்த கோரிக்கையை பிரிட்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான விஜய் மல்லையா, இந்தியாவில் இருந்து தப்பி, பிரிட்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரை நாடு கடத்துமாறு, இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று, பிரிட்டன் உள்துறை உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மல்லையா மனுத்தாக்கல் செய்தார்.

இந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் சட்டரீதியாக மல்லையாவிற்கு மேலும் சில வாய்ப்புகள் உள்ளதால், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த, மேலும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

Exit mobile version