மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை பெற்றோர்கள் தானம் செய்துள்ளனர்.

பரமக்குடி அருகே காந்தி நகரைச் சேர்ந்த, வெற்றிவேல் என்பவரின் மகன் சரத்குமார், கடந்த 11ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து, சரத்குமாரின் பெற்றோர், மகனின் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்கச் சம்மதித்தனர். அதன்படி, சரத்குமாரின் இரண்டு கண்கள், இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கணையம் உள்ளிட்ட 8 உடல் உறுப்புகளை, அவருக்கு சிகிச்சையளித்த, தனியார் மருத்துவமனை தானமாகப் பெற்றுள்ளது. அவை உயிருக்குப் போராடும் 7 நபர்களுக்கு பொருத்தப்பட உள்ளது. குறைந்த கல்வியறிவு, கூலி வேலை என கடும் சிரமத்தில் வாழும் சரத்குமாரின் பெற்றோர், தங்கள் மகனின் உடல் உறுப்புக்களை தானம் செய்து, 7 பேரின் உயிரைக் காப்பாற்றி இருப்பதை, அந்தப் பகுதி மக்கள் உருக்கத்தோடு பாராட்டுகின்றனர். மேலும், சரத்குமாரின் பெற்றோருக்குத் தமிழக அரசு தகுந்த உதவி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Exit mobile version