காதலி பேச மறுத்ததால் காதலன் தூக்கிட்டு தற்கொலை!!

சென்னை பீர்க்கன்கரணை அடுத்த ஆலப்பாக்கத்தில் காதலி பேச மறுத்ததால், காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்தவர் நேபாள நாட்டை சேர்ந்த டில் பகதூர். இவர் காதலி பேச மறுத்த மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், டில் பகதூரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version