ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு தொடக்கம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. காளைகளின் உரிமையாளர்கள் வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்றுச் செல்கின்றனர்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தைப்பொங்கல் முதல் நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு மற்றும் டோக்கன் வழங்கும் பணி காலை 8 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இரவு முதலே அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில், காளை உரிமையாளர்கள் குவியத் தொடங்கினர். பின்னர் வரிசையில் காத்திருந்த ஏரளமான காளை உரிமையாளர்களிடம், கால்நடை மருத்துவத் துறையைச் சேர்ந்த 16 பேர் கொண்டக்குழு, உரிய ஆவணங்களை பெற்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.
 

Exit mobile version