தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி, அக்டோபர் 21-ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அதற்கான ரயில் டிக்கெட்டை இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம். காலை 8 மணிக்கு தொடங்கிய டிக்கெட் முன்பதிவு இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. ஏராளமானோர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்திருந்தனர். 22-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளையும், 23-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாளும் நடைபெறுகிறது.

Exit mobile version