திருவாரூர் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சி

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி புத்தகக் கண்காட்சி நடைபெற்று வந்தது. இந்த புத்தகக்கண்காட்சியில் உலகத்தரம் வாய்ந்த 15க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்துகொண்டு 40,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களை காட்சிக்கு வைத்தனர் கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் அனைத்து துறைச்சார்ந்த புத்தகங்களும் கண்காட்சியில் இடம்பெற்றன. இந்த புத்தகக் கண்காட்சியில் அனைத்து துறைத்தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

Exit mobile version