கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம், தேசிய வாசிப்பு இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி தொடங்கியது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு 10சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. இம்மாதம் 24ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.

Exit mobile version