வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்: குற்றவாளியை பிடிப்பதற்காக டெல்லி விரைந்த தனிப்படை

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை குழு டெல்லி விரைந்துள்ளது.

கடந்த 30ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பனுக்கு கடந்த 16ம் தேதி மிரட்டல் கடிதம் வந்தது. டெல்லி மோதிநகர், சுதர்சன் பூங்கா பகுதியை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவர் கடிதத்தை எழுதியிருந்தார்.

தனது மகனுடன் சேர்ந்து 30ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கச் செய்வோம் என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து வாயில்களிலும் காவல்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற பாதுகாப்பு குழு உதவி ஆணையர் விஜயராவலு தலைமையில், 4 பேர் கொண்ட குழு வெடி குண்டு மிரட்டல் விடுத்த ஹர்தர்சன் சிங் நாக்பாலை கைது செய்ய டெல்லிக்கு விரைந்துள்ளனர்.

Exit mobile version