அமிர்தசரஸில் வெடி குண்டு தாக்குதல் – 3 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வழிபாட்டு நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் நடத்திய வெடி குண்டுத் தாக்குதலில் 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமிர்தசரஸில் உள்ள அட்லிவால் கிராமத்தில் பிரார்த்தனை கூட்டம் ஒன்று நடைபெற்று வந்தது.

அங்கு இன்று காலை இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆசிரமத்தின் முன் பகுதியில் வெடிக் குண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

Exit mobile version