அமேசான் காட்டு தீயை அணைக்கும் பணியில் பொலிவியா அதிபர்

பற்றி எரியும் அமேசான் காட்டுத்தீயை அணைப்பதற்காக, பொலிவியா அதிபர் களத்தில் இறங்கியுள்ளார்.

அமேசானில் பற்றி எரியும் காட்டுத் தீயானது பொலிவியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிகுய்தானியா பிராந்தியத்திலும் எரிந்து வருகிறது. பொலிவியா எல்லைக்குட்பட்ட அமேசான் காட்டுத்தீயில் கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிந்துவிட்டன.

இந்த காட்டுத்தீயை அணைக்க, பொலிவியா அரசு அமெரிக்காவிடம் இருந்து சூப்பர் டேங்கர் என்று அழைக்கப்படும் ‘போயிங் 747’ விமானத்தை குத்தகைக்கு வாங்கி 2 ஆயிரம் தீயணைப்பு வீரர்களை கொண்டு தீயை கட்டுப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பொலிவியா அதிபர் ஈவோ மெரேலஸ் சிகுய்தானியா பிராந்தியத்துக்கு நேரில் சென்று கவச ஆடைகளை அணிந்து கொண்டு, அவரும் தீயணைக்கும் பணியில் களம் இறங்கினார்.

இதற்கிடையில் சிகுய்தானியா பிராந்திய காட்டுத்தீ 90 சதவீதத்திற்கும் அதிகமாக அணைக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஈவோ மெரேலஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version