அர்ஜுனா விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரன்

அர்ஜுனா விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரன், தமிழக அரசிற்கும், முதலமைச்சருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அர்ஜுனா விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரன் சென்னை விமான நிலையத்தில் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். தனக்கு விருது வழங்கிய மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார். 20 ஆண்டுகளுக்கு பின்னர் பாடிபில்டர் துறையில் விருது வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய பாஸ்கரன், தமிழகத்தில் உள்ள தன்னை போன்ற இளைஞர்களுக்கு மாநில அரசு வேலை வாய்ப்பை வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Exit mobile version