சந்தியாவின் உடல்பாகம் இருந்த இடம் : அதிர்ச்சி காட்சிகள்

சென்னையில் குப்பை கிடங்கில் பெண்ணின் கை, கால் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், அவரது கணவரே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. சென்னை பள்ளிக்கரணை குப்பை கிடங்கில், கடந்த மாதம் பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலையில் துப்பு துலங்கிய காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா என்பது தெரியவந்தது. கணவர் பாலகிருஷ்ணனே கொலையில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை ஜாபர்கான் பேட்டையில் வசித்துவந்த அவர், திரைப்படம் எடுத்து நஷ்டமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, சந்தியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, பாலகிருஷ்ணன் பிரச்சனை செய்துள்ளார். பின்னர், இருவரும் விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். பொங்கல் பண்டிகையின் போது சென்னை வந்த சந்தியாவை, பாலகிருஷ்ணன் கொடூரமாக கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியிருக்கிறார். பாலகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர், ஜாபர்கான் பேட்டை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

குப்பைத் தொட்டில் உடல் பாகங்களை போட்டதாக அவர் கூறினார். அவர் அடையாள காட்டிய ஈக்காட்டுத்தாங்கல் கூவத்தில் இருந்து சந்தியா உடலின் மற்றொரு பாகம் கண்டெடுக்கப்பட்டது. தலை மற்றும் வயிற்றுப்பகுதி இதுவரை கிடைக்கவில்லை. பாலக்கிருஷ்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version