உடல் உறுப்பு தானம் ஒரு பொது இயக்கமாகவே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் 9–வது இந்திய உடல் உறுப்பு தான தினம் நிகழ்வு இன்று டெல்லியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் 4 முறையாக தொடர்ந்து முதல் இடம் வகிப்பதற்கான விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதற்கான விருது பெற்றார்.

அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தானமாக பெற்ற உறுப்புகளை கொண்டு பல்வேறு உறுப்பு மாற்று சிகிச்சைகள் தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் சிறந்த 1000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மூலம் மாற்று அறுவை சிகிச்சைகள் தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானம் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் கின்னஸ் சாதனை நிகழ்வுகள் மாரத்தன் ஓட்டம் போன்ற நிகழ்வுகள் மூலமும் உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கப்பட்டன. மேலும் தேவைப்படுபவர்களுக்கு உறுப்புகள் ஒதுக்கீடு தொடர்பாகவும் ஆன்லைன் சேவைகள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் ஒரு பொது இயக்கமாகவே தமிழகத்தில் செயல்பட்டு வருவதாக தமிழக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version