ஜெகதாப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் தரை தட்டிய படகுகள்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் மீன்பிடித்துறைமுகத்தில் படகுகள் தரை தட்டியதால் கடலுக்கு செல்லும் முடிவை மீனவர் சங்கத்தினர் ஒத்தி வைத்தனர்.

ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தினால், 4000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு பிரிவைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல நாளை முடிவு செய்திருந்தனர். காலை கடல் திடீரென உள்வாங்கியதால் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 150 விசைப்படகுகள் மற்றும் 300 நாட்டுப்படகுகள் தரை தட்டியுள்ளன. இதனால் பராமரிப்பு பணிகளில் ஈடுபட முடியாத சூழல் உருவாகியுள்ளது. படகுகள் தரை தட்டியதால் கடலுக்கு செல்லும் முடிவை மீனவர் சங்கத்தினர் ஒத்தி வைத்துள்ளனர். படகுகளை சரி செய்த பின்னர் மீண்டும் கடலுக்குள் செல்ல உள்ளதாக மீனவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Exit mobile version