பவானி ஆற்றில் களைக்கட்டும் படகு சவாரி- ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரால் பவானி ஆற்றின் கரையோரம் விசைப் படகு சவாரி களைக்கட்டி வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றின் கரையில் நெருஞ்சிப்பேட்டை படகுத்துறையில் பொது மக்கள் ஆரவமுடன் படகு சவாரி செய்து வருகின்றனர். எதிர்ப்புற கரையாக அமைந்துள்ள சேலம் மாவட்டம் பூலாம்பட்டி படகுத்துறை வரை மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 10 ஆயிரம் கன அடி தண்ணீரால் படகு சவாரி படு ஜோராக நடந்து வருகிறது.

இதனால் நெருஞ்சிப்பேட்டையிலிருந்து படகுப் போக்குவரத்து மூலம் இரண்டு நிமிடத்தில் பூலாம்பட்டி சென்றடையலாம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விடுமுறை நாட்களில் படகில் பயணிக்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள் அதிக அளவில் இங்கு படகில் பயணம் செய்து மகிழ்கின்றனர். இதனை சுற்றுலாத்தலமாக வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Exit mobile version