சிம்ஸ் பூங்காவில் மீண்டும் படகு சவாரி துவக்கம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் மழையின் காரணமாக கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட படகு சவாரி மீண்டும் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள்,வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த 4 நாட்களாக மழை காரணமாக பூங்காவில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது.

இதனால் இங்கு படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மழையின் தீவிரம் குறைந்ததால், படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால், குன்னூருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சிய அடைந்துள்ளனர்.

Exit mobile version