ஸ்கூபா டைவிங் நீச்சலுக்கு படகில் சென்றவர்கள் பலி

அமெரிக்காவின் சன்டாகுரூஸ் தீவில், சுற்றுலாப்பயணிகள் சென்ற படகில் தீ விபத்து ஏற்பட்டதால், 25 பயணிகள் பலியாகினர்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சன்டாகுரூஸ் தீவில், ஆழ் கடல் பகுதியில் செய்யப்படும் ஸ்கூபா டைவிங் நீச்சல் புகழ் பெற்றதாகும். இதில் பங்கேற்க சுற்றுலாப்பயணிகளுக்கு 3 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, பயணியர்கள் உள்பட மொத்தம் 38 பேர் கொண்ட குழு ஒன்று, சன்டாகுரூஸ் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிக்கு படகில் சென்றனர். அப்போது, படகில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த கடலோரக் காவல்படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில், படகில் சிக்கிய 5 பேரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். தீ விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் குறித்த தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை.

Exit mobile version