பணிக்கு திரும்பும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை- பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை

பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்றைய தினம் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுப்பவர்கள் மீது காவல் துறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் புகார் அளிக்கலாம் என்றும், ஆசிரியர்களிடம் இருந்து புகார்கள் வந்தால் காவல் நிலையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version