கண்பார்வையற்றவர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே கண்பார்வை இழந்தவர்களின் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் தங்க நகைகள், ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மறைமலைநகர் அருகேயுள்ள பேரமனூர் அப்துல் கலாம் தெருவைச் சார்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி இருவரும் கண் பார்வை இல்லாதவர்கள். இவர்கள் இருவரும், தனது மகனுடன் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 28 சவரன் நகைகள், வெள்ளிப்பொருட்கள், ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version