சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல், விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நள்ளிரவு முதல் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version