சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாகை மாவட்டம் சீர்காழியில் கடந்த சில தினங்களாக அனல் காற்றுடன் வெப்பம் தாக்கி வந்தநிலையில், திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில்,பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரமாக கனமழை பெய்ததது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Discussion about this post