பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையின்போது குண்டுவெடிப்பு

ஜார்கண்ட் மாநிலம் குச்சாய் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையின்போது குண்டுவெடித்ததில் கோப்ரா படையினர், போலீசார் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

குச்சாய் பகுதியில் உள்ள சராய்கேல்லா பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஜார்கண்ட் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த குண்டு ஒன்று வெடித்ததில், 209 கோப்ரா படையினர் 8 பேர் மற்றும் ஜார்கண்ட் போலீசார் 3 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்புப்படை அதிகாரிகள், ஹெலிகாப்டர் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ராஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அந்தப்பகுதியில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version