தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சையால் 400 பேர் பாதிப்பு

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சையால் இதுவரை 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புகள் தொடர்பாக, மருத்துவக் குழுவினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவர் மோகன் காமேஸ்வரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட அதிக வாய்புள்ளதாகக் கூறினர்.

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சையால் இதுவரை 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 20 பேர் குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர். முகத்தில் வீக்கம் மற்றும் வலி, கண் சிவத்தல் போன்றவை கருப்பு பூஞ்சை நோய்க்கான அறிகுறி எனவும் மருத்துவ குழுவினர் குறிப்பிட்டார்

Exit mobile version