கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜக பந்த் : தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜக பந்த் அறிவித்துள்ளதால் தமிழக பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. சபரிமலை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டும் இயக்கப்படுகிறது. இரு மாநில அரசு பேருந்துகளின் சேவை முடங்கியதால் நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Exit mobile version