அரசு ஊழியரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக எம்எல்ஏ ஜாமினில் விடுவிப்பு

மத்திய பிரதேசத்தில் மாநகராட்சி ஊழியரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக எம்எல்ஏ ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கான பணி 26ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு வந்த பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்கியா,ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்ததோடு, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் பேட்டை கொண்டு மாநகராட்சி அதிகாரி தீரேந்திர சிங் மீது அவர் தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவம் சமூக வலை தளங்களில் வைரலானதை அடுத்து, விஜய்வர்கியா கைது செய்யப்பட்டார். அவருக்கு போபால் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, சிறையில் இருந்து அவர் இன்று காலை வெளியே வந்தார்.

Exit mobile version