கேரளாவில் நாளை முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு

சபரிமலையில், பெண்கள் அனுமதிக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 2 பெண்கள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து, திருவனந்தபுரத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். கேரள தலைமை செயலகம் நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரர்களில் சிலர், உள்ளே நுழைய முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். இதையடுத்து, கேரளாவில் நாளை முழு அடைப்புக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.

Exit mobile version