வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசு தோல்வி

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்து விட்டதால் தான் தேச பாதுகாப்பு பிரச்சினை எழுப்பப்படுவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பொய்களையும், மாபெரும் தோல்விகளையும் மறைப்பதற்காகவும், திசைதிருப்பவும் பிரதமர் மோடி, தேசப் பாதுகாப்பை தனக்கு ஏற்றார் போல் பயன்படுத்துகிறார் என இந்தக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. எதிரிகளின் கொடிய எண்ணங்களையும், திட்டங்களையும், மக்கள் ஒற்றுமையோடு, எதிர்ப்போம் தோற்கடிப்போம் என காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய பொருளாதாரத்தை மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வருதல், சமூக நீதி மற்றும் ஒற்றுமையை கொண்டுவர உறுதி ஏற்கப்பட்டது.

Exit mobile version