புதுவை பாஜகவினர் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின்கட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் கட்டணத்தை உயர்த்தி மாநில அரசு அறிவித்தது. புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப்பெற வலியுறுத்தி லாஸ்பேட்டை பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Exit mobile version