புதுச்சேரியில் 10-க்கு மேற்பட்ட வீடுகளின் வாசலில் விநோத குறியீடுகள்-மக்கள் அச்சம்

புதுச்சேரியில் 10-க்கு மேற்பட்ட வீடுகளின் வாசலில் விநோத குறியீடுகள் வரையப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

புதுச்சேரி சாராம் பகுதியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் தெருவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வினோத குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. அதில் மனித பொம்மை ஒன்று வரையப்பட்டு அதில் கூட்டல் மற்றும் கழித்தல் குறியீடுகள் குறிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், இது குறித்து தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீடுகளில் வரையறுக்கப்பட்டுள்ள குறியீடுகளை ஆய்வு செய்து, அசனை புகைப்படம் எடுத்தனர். இதில் வடமாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version