புத்தாண்டின் போது பைக் ரேசுக்கு தடை விதிப்பு

புத்தாண்டின் போது பைக் ரேஸுக்கு தடை விதித்து சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாகல் செய்த பொதுநல மனுவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உயிரிழப்பு காரணமாக பைக் ரேசுக்கு தடை விதிக்க கேட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாநகர் காவல் ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், புத்தாண்டில் மதுரையில் ஜாலி பைக் ரைடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் இதனை பின்பற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு, டிஜிபி சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

Exit mobile version