காற்றுமாசைத் தடுக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி மிதிவண்டிப் பயணம்

காற்று மாசடைவதைத் தடுக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி மணிகண்டன் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ஒற்றைக்காலில் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

காற்று மாசடைவதைத் தடுக்க வலியுறுத்தியும், நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கைவிட வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளி மணிகண்டன் கடந்த 13ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி மிதிவண்டிப் பயணத்தைத் தொடங்கினார். இவர் ஜனவரி ஒன்றாம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தனது பயணத்தை முடிக்கிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வழியாக வரும்போது, அப்பகுதியிலுள்ள மக்களுக்குச் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

Exit mobile version