காற்று மாசு குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

காற்று மாசை தடுக்க தமிழக அரசு சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் பீதியும் அடையத் தேவையில்லை எனவும் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் காற்று மாசுபாடு தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயல் மற்றும் கடல் காற்று வீசாததால் காற்று மாசு அதிகரித்ததாக கூறினார்.

Exit mobile version