திரிபுராவில் சுதந்திர தினத்தையொட்டிவிழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில், எரிபொருள் செலவில்லாத மாசு ஏற்படுத்தாத மிதிவண்டிகளைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த வலியுறுத்தி மிதிவண்டிப் பேரணி நடைபெற்றது.

இதில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வங்கதேச நாட்டினரும் கலந்துகொண்டனர்.

12 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியின்போது மிதிவண்டிப் போக்குவரத்தால் இரைச்சல், தூசி, புகை ஆகிய மாசுபாடுகள் இல்லாதது குறித்துப் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

Exit mobile version