புதிய சாலை, குடிநீர் திட்ட விரிவாக்க பணிக்கான பூமி பூஜை

ஈரோடு மாவட்டம் கூகலூர் பேரூராட்சியில் 85 லட்ச ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைத்தல் மற்றும் குடிநீர் திட்ட விரிவாக்க பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

கூகலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாய்க்கால் புதூர் முதல் தடப்பள்ளி பாசனப் பகுதி வரை தார்சாலை அமைக்கப்பட உள்ளது. அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர் ராஜாகிருஷ்ணன் பூமி பூஜையில் கலந்து கொண்டு கட்டுமானப் பணிகளைத் துவக்கி வைத்தார். மேலும் அவர் கொன்னமடைப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பணிகளையும் துவக்கி வைத்தார்.

Exit mobile version