தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு கட்ட பூமி பூஜை

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, 44 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 576 வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் பரப்பனஞ்சேரியில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. தற்போது தமிழ் நாடு குடிசை வாரிய கணக்கெடுப்பின் படி 2 ஆயிரத்து 512 பேர் சொந்த வீடு இல்லாமல் இருந்து வருகின்றனர். ஆக்கிரமிப்புகள் மற்றும் கோவில் பகுதிகள் உள்ளவர்களுக்காக 576 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. இதற்காக நடைபெற்ற பூமி பூஜையில், தலைமை கொறடா ராஜேந்திரன் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Exit mobile version