பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், பவானி ஆற்றில் விநாடிக்கு 4ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பொதுப் பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் வெள்ளப் பெருக்கால் பரிசல் இயக்கவும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version