முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலின் பேரில், குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் ஜனசங்க பிரமுகருமான மறைந்த நானாஜி தேஷ்முக்கிற்கும், அசாமை சேர்ந்த பின்னணி பாடகரான மறைந்த பூபன் ஹசாரிக்காவுக்கும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விருது பெற உள்ள மூவருக்கும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version