பி.ஹெச். பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் அஞ்சலி

சென்னையில் காலமான முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

உடல் நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச். பாண்டியன், சிகிச்சை பயனின்றி காலமானார். இதையடுத்து சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில், அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பி.ஹெச். பாண்டியன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  அப்போது, தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பி.ஹெச். பாண்டியனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தனது இரங்கலை முதலமைச்சர் தெரிவித்துக்கொண்டார்.

Exit mobile version