விதிகளை மீறி போஸ்டர் ஒட்டினால் 6 மாதங்களுக்கு பதிவு கிடையாது : பார் கவுன்சில் எச்சரிக்கை

சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவு செய்யும்போது விதிகளை மீறி போஸ்டர் ஒட்டினால், ஆறு மாதங்களுக்கு பதிவு நிறுத்தி வைக்கப்படும் என பார்கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞர்களாக பதிவு செய்யும்போது பட்டாசு வெடிக்க கூடாது என்பன உள்ளிட்ட விதிகள் உள்ளன. இதனை மீறி பேனர்கள் வைத்தற்காக 11 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சமீபத்தில் பார் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், விதிகளை மீறி போஸ்டர்கள் வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை வழக்கறிஞராக பதிவு செய்வதை ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் முடிவு செய்துள்ளது. மேலும் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என புதிய வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version