வீடு கட்டும் பணி ஆணையை பயனாளிகளுக்கு அமைச்சர் பென்ஜமின் வழங்கினார்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், வீடு கட்டும் பணிக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு அமைச்சர் பென்ஜமின் வழங்கினார்.

வீடில்லாத ஏழை மக்களுக்கு பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு தரப்பில் ஒன்றரை லட்ச ரூபாயும், மாநில அரசு சார்பில் 60 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணிக்கான ஆணையை ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் வழங்கினார்.

Exit mobile version