விழுப்புரம் சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்

விழுப்புரம் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணிகள் தொடங்கியது.

சட்டக் கல்லூரியில் பயில விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கல்லூரி வளாகத்திலேயே வழங்கப்பட்டது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.250, மற்ற வகுப்பினருக்கு ரூ500 விண்ணப்ப கட்டணமாக பெறப்பட்டது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் வந்து விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிப்பதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version