வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பதனீர் விற்பனை சூடுபிடித்துள்ளது

வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பதனி மற்றும் நுங்கு விற்பனை கரூர் மாவட்டத்தில் அமோகமாக நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நுங்கு மற்றும் பதநீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதன் விலை மிகவும் குறைவு என்பதால் பொதுமக்கள் விரும்பி அருந்துவதாக நுங்கு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நுங்கு உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் சூட்டினை தணிப்பதால் விரும்பி உண்பதாக வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். பொதுமக்கள் அதிகளவு நுங்கினை வாங்குவதன் மூலம் பனைத் தொழில் செய்வோரின் வாழ்வாதாரமும் முன்னேற்றம் அடைவதாகம் அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version