வார இறுதி நாட்களில் சென்னை கடற்கரைகள் மூடல்

கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு வார இறுதி நாட்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு அறிவித்த கட்டுப்பாடு காரணமாக, சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று காலை நடைபயிற்சிக்கு வந்தவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கடற்கரைகளில், வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை அறியாமல், மெரினா கடற்கரையில் காலை நேரத்தில் வழக்கம் போல், நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள ஏராளமானோர் வந்தனர்.

அவர்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், கொரோனா கட்டுப்பாடு உத்தரவை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பினர்.

இதனால், நடைபயிற்சிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினர். இதையடுத்து, காமராஜர் சாலையில் மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

Exit mobile version