பி.இ. பி.டெக் சேர்க்கைக்கான கலந்தாய்வு  – முதல் நாளில் 15 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்

பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது. முதல் நாளில் 15 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தப் பொறுப்பு 2019-20ஆம் கல்வியாண்டு முதல் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் கலந்தாய்வு உதவி மையங்கள் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே 31 கடைசி நாளாகும். மாணவர்கள் www.tneaonline.in, www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள 044- 22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். முதல் நாளான நேற்று சுமார்15 ஆயிரம் மாணவர்கள் வரை பதிவு செய்துள்ளனர்

Exit mobile version