வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர் நீக்கம் – பிசிசிஐ நடவடிக்கை!

கிரிக்கெட் வர்ணனையாளர்கள் குழுவிலிருந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கரை பிசிசிஐ நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்கள் கொரோனா வைரஸ் காரணமாக அண்மையில் ரத்து செய்யப்பட்டன. இந்த போட்டிகளில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் வர்ணனையாளராக இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியின் போது, மற்ற வர்ணனையாளர்கள் மைதானத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், மஞ்ரேக்கர் மட்டும் வருகை தரவில்லை என்று கூறப்படுகிறது. இதேபோல், பிசிசிஐ நடத்தும் மற்ற போட்டிகளிலும் அவர் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனால், அவரை பிசிசிஐ நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version